மீண்டும் எலித் தொல்லை

சிங்கப்பூரில் எலிகள் மீண்டும் பகல் நேரங்களிலும் தலைக்காட்ட தொடங்கி இருக்கின்றன. பகலில் எலிகள் நடமாட்டம் இருந்தால் தொல்லை தரும் அளவிற்கு எலிகள் அதிகரித்து விட்டன என்பதே பொருள் என்று பூச்சிமருந்து நிறுவனங்களில் ஒன்றான பெஸ்ட் பர்ஸ்டர்ஸ் நிறுவனத் தலைவர் தாமஸ் பெர்னாண்டஸ் சொன்னார். எலிக்கடி தொடர்பிலான விவகாரங்கள் 20%க்கும் 60%க்கும் இடையில் அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு எலி தொடர்பில் 1,563 பேர் தொடர்புகொண்டு விவரம் கேட்டனர். இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55% அதிகம். இந்த ஆண்டின் முதல் பாதியில் எலி தொடர்பில் 400 பேர் இந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு இருக்கிறார்கள்.

எலிகள் பதுங்கி வாழும் இடங்களைச் சோதனையிட்டு அவற்றை நன்கு பராமரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். எலித் தொல்லைக்குச் சுத்தமில்லாமல் இருப்பதே முக்கிய காரணம். எலிகள் கூரிய பற்களால் மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களைச் சேதப்படுத்துவதோடு பல சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!