'வெல்கேர்' மாணவர் பராமரிப்பு நிலையத்தின் அரசு மாணவர் பராமரிப்பு கட்டண உதவி வழங்கும் நிர்வாகி தகுதியை சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சு ரத்து செய்துள்ளது. மாற்று பராமரிப்புச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய பெற்றோருக்கு போதிய கால அவகாசம் அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து சேவை ரத்து நடப்புக்கு வருகிறது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மாணவர் பராமரிப்புச் சேவை நிலையத் தகுதியை ரத்து செய்வது குறித்து அந்நிலையத்திற்கு மார்ச் 22ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. அமைச்சின் அண்மைய கணக்குத் தணிக்கையின்போது பல தடவைகள் மாணவர் பராமரிப்பு கட்டண மானியங்கள் தவறான முறையில் பெறப்பட்டி ருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் வர்த்தக விவகாரப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது. கணக்கில் உள்ள குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க 'வெல்கே'ருக்கு 14 நாட்கள் கொடுக்கப்பட்டது. மேலும் இது குறித்த செயல்முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அமைச்சு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து நிலையம் தெரிவித்த பதிலின் அடிப்படையில், குறைபாடுகளைச் சரியாக விளக்க 'வெல்கேர்' மாணவர் பராமரிப்பு நிலையம் தவறிவிட்டதாக சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சு முடிவு செய்தது.
நிலையத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் கிட்டத்தட்ட மூன்று மாத காலத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்ட போதும், செயல்பாடுகளை மேம் படுத்துவதுடன், அரசாங்கத்தின் மாணவர் பராமரிப்பு மானியத்தை முறையாக நிர்வகித்து பொதுப் பணம் விரயமாகாமல் இருப்பதில் தனது கடப்பாட்டையும் திறனையும் நிலையத்தினால் வெளிப் படுத்த முடியவில்லை என்று அமைச்சு தெரிவித்தது. வெல்கேர் நிறுவனம் தவறான முறையில் பெற்ற மானியத் தொகையை முழுமையாக மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் அமைச்சு, வெல்கேர் நிலையத்தில் மாணவர்களைச் சேர்த்துள்ள பெற்றோரு டன் தொடர்புகொண்டு, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, உதவி வருகிறது.