வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) நகர மறுசீரமைப்பு ஆணையமும் (யுஆர்ஏ) தங்களின் கார் நிறுத்தக் கட்டணங்களை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்துகின்றன. குறுகிய கால மற்றும் மாதாந்தர கார் நிறுத்தக் கட்டணங்களும் இதில் அடங் கும். இதற்கு முன் 2002ல் கார் நிறுத்தக் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போதிலிருந்து கட்டு மானம், மனிதவளம், இதர பரா மரிப்புச் செலவுகள் அதிகரித்துள் ளதால், கட்டடங்கள் கட்டும் செலவு, கார் நிறுத்தப் பேட்டை களை நடத்துவதற்கும் நிர்வகிப்ப தற்குமான செலவுகளும் அதிக ரித்தன என்றும் கழகமும் ஆணை யமும் நேற்று தெரிவித்தன.
"இந்தச் செலவுகளுக்கு ஈடு கட்டும் வகையில் கார் நிறுத்தக் கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை," என்றும் அந்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது. குறுகியகால கார் நிறுத்தக் கட்டணம் 30 நிமிடங்களுக்கு 50 காசிலிருந்து 10 காசு உயர்ந்து 60 காசாகும். ஒரு மணி நேரத் துக்கான கட்டணம் 20 காசு உயர்ந்து $1.20 காசாகும். அதிக பயன்பாடு உள்ள பகுதி யில் இருக்கும் மின்னியல் கார் நிறுத்த முறையிலான கார் நிறுத் தப் பேட்டைகளில் நிமிட அடிப் படையில் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும். தனது கார் நிறுத்தப் பேட்டை களில் உள்ள மாதாந்தரக் கட்டண உயர்வுகளில் மாற்றங்கள் அறி முகப்படுத்தப்படும் என்று வீவ கழகம் தெரிவித்தது.