அன்புக்குரியவர்களின் இழப்பு, குடும்ப வன்முறை, பள்ளியில் அடாவடித்தனத்துக்கு ஆட்படுவது போன்ற அதிர்ச்சியளிக்கக்கூடிய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக புதிய கட்டமைப்பு ஒன்று உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களின் தொடர்பில் ஏற்படும் அதிர்ச்சியைக் கையாளும் திறனை பள்ளி ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள், தொண்டூழியர் கள் ஆகியோருக்கு அளித்து, அத்தகைய சம்பவங்களால் மன அழுத்தத்துக்கு ஆட்படும் பிள் ளைகளுக்கு ஆதரவு அளிக்கிறது இந்த முயற்சி.
'ஸ்டே பிரிபேர்ட்=ட்ராமா நெட்வொர்க் ஃபார் சில்ட்ரன்' எனும் இந்தத் திட்டத்தை நேற்று முன்தினம் கேகே மகளிர், சிறுவர் மருத்துவமனையும் 'தெமாசெக் கேர்ஸ்' அறநிறுவனமும் இணைந்து தொடங்கி வைத்தன.