சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையினருக்குக் கிட்டும் பலன்கள் குறித்து அவர்களிடம் விளக்கிச் சொல்வதற்காக இரு ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத் தப்பட்ட தொண்டூழியர் திட்டம் இப்போது எல்லா மூத்த குடிமக் களையும் சென்றடையும் விதத் தில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்மூலம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங் கப்பூரர்கள் அனைவரும் தங்க ளுக்குப் பயன்தரக்கூடிய பல் வேறு அரசாங்கத் திட்டங்களை அறிந்துகொள்ள இயலும்.
முன்னோடித் தலைமுறைத் திட்டத்தில் இடம்பெறாத, 65 மற்றும் அதற்கு மேல் வயதுடைய 90,000 மூத்த குடிமக்களை வீடு வீடாகச் சென்று பார்த்து அவர்களிடம் மெடிஷீல்ட் லைஃப், 'சாஸ்' எனும் சமூக சுகாதார உதவித் திட்டம், ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு போன்ற அரசின் திட்டங்கள் பற்றி முன்னோடித் தலைமுறைத் தூதுவர்கள் விளக்குவர். இதனை நேற்று அறிவித்த பிரதமர் லீ சியன் லூங், "மூத்த குடிமக்களைச் சமூக நடவடிக் கைகளில் ஈடுபடுத்தி அவர்கள் ஆரோக்கியமாகவும் துடிப்புடனும் வாழ தொண்டூழியர்கள் உதவு கின்றனர்," என்று புகழ்ந்தார்.