கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட வேலை இடம் குறித்த புகார்களில் இனம், சமயம் தொடர்பான வேலை பாகுபாடு பற்றிய புகார்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவே என்று மனிதவள அமைச்சுக்கான துணை அமைச்சர் டியோ செர் லாக் கூறினார். 2014 முதல் நியாமான வேலை வாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்பு கூட்டணி இதுவரை 10 முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 முதலாளிகளைத் தண்டித்துள்ளது. 2011 முதல் 2015 வரை மனிதவள அமைச்சுக்கும் கூட்டணிக்கும் 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அதில் இனம், சமயம் சார்ந்த புகார்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவு.
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத முதலாளி களுக்கு எதிராக, வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு சேர்த்துக்கொள்வது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர். இந்நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பயன் அளித்து உள்ளன என்ற மன்ற உறுப்பினர்களின் கேள்விக்குப் பதில் அளித்த திரு டியோ, தவறு செய்து தண்டிக்கப்பட்ட நிறுவனங்கள் குறித்து அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அவை மீது மறு படியும் புகார்கள் எழவில்லை என்று விளக்கினார்.2016-07-12 06:00:00 +0800