ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது என்றாலும் நிலையற்ற தன்மை உலகச் சந்தைகளைப் பாதிக்கும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். பிரிட்டனின் விலகல் குறித்த பேச்சுவார்த்தையும் விவாதங்களும் நடைபெறும்போது நிதிச் சந்தைகள் தொடர்நிலையான அதிக ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது என்றார் அவர். இதில் கவலையளிக்கக்கூடியது என்னவெனில் பிரிட்டன் ஒன் றியத்தில் இருந்து வெளியேறுவதால் ஏற்படக்கூடிய பொருளியல், அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல்கள். இந்தச் சூழல்கள் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், உலகப் பொருளியலை குறைந்தது சில ஆண்டுகளுக்காவது பாதிக்கும். அத்துடன் பொருளியல் வளர்ச்சியையும் இவை பாதிக்கும் என திரு தர்மன் தெரிவித்தார்.
குறுகியகால பாதிப்புகளைப் பொறுத்தவரை அவை பெரும்பாலும் நிதிச்சந்தைகளில்தான் இருக் கும் என்ற அவர், பிரிட்டன் வெளியேறுவதால் நாணய மதிப்பிலும் பங்குச் சந்தைகளிலும் ஏற்படக் கூடிய உடனடித் தாக்கம் சிங்கப் பூருக்கு பெரும் கவலையளிக்கக் கூடியதல்ல எனக் கூறினார். பிரிட்டனின் வெளியேற்றம், அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக், ஜிஐசி எனப்படும் அரசு முதலீட்டு நிறுவனம் ஆகியவற்றில் எத்தகைய பாதிப்பை ஏற் படுத்தும் என்று வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே நாடாளு மன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு திரு தர்மன் பதில் அளித்தார்.
மரீனா பே சேண்ட்சில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற துணைப் பிரதமர் திரு தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்