11வது மாடியில் இருந்து விழுந்த 68 வயது ஆடவர் ஒருவர் துணி காயப்போடும் கம்பியில் சிக்கி உயிர் பிழைத்தார். அவரது கால் சட்டை 8வது மாடியில் இருந்த கம்பியில் மாட்டிக் கொண்டதால் அவர் அந்தரத்தில் தொங்கினார். டெம்பனிஸ் ஸ்ட்ரீட் 41, புளோக் 410ல் துணி காயப் போடும் கம்பிகளில் சிக்கியபடி ஒருவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக மாலை 3.30 மணி வாக்கில் அழைப்பு வந்த தாக குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார்.
8வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஆடவரை குடிமைத் தற்காப்புப் படையினர் பத்திரமாக மீட்ட னர். அந்த ஆடவர் வீட்டில் தனியாக இருந்தபோது சமையலறை சன்னல் வழியாக வெளியில் குதித்துவிட்டதாக அவரது 34 வயது மகன் திரு சின் கூறினார். அவர் எவ் விதக் காயமுமின்றி உயிர்தப்பியது ஆச்சரியமாக உள்ளது என்றார். உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.