சட்டவிரோத காற்பந்துச் சூதாட் டத்தில் ஈடுபட்டதாகச் சந்தேக நபர்கள் 39 பேரை சிங்கப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர். அனைத்துலக போலிசான 'இன்டர்போல்' தலைமையில் அனைத்துலக அளவில் மேற்கொள் ளப்பட்ட கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது. இதில், உலக அளவில் 4,000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டதாகவும் ஆசியாவில் மட்டும் $13 மி. தொகைக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கைதான 39 பேரும் சட்டவிரோத சூதாட்டத்திற் காக $2.5 மில்லியனுக்கும் அதிக மான தொகையை வசூலித்ததாக சிங்கப்பூர் போலிஸ் படை கூறியது. அவர்களிடமிருந்து ரொக்க மாக $650,000 பணமும் கணினி கள், மடிக்கணிகள், கைபேசிகள் உட்பட சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத் தப்பட்ட சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், சந் தேக நபர்களின் வங்கிக் கணக்கு களிலிருந்து $810,000க்கும் அதிக மான பணத்தையும் போலிசார் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.