இலங்கை-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை

சிங்கப்பூர் - இலங்கை இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடை பெற இருக்கிறது. வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரனும் வளர்ச்சிக் கொள்கைகள், அனைத் துலக வர்த்தகத்திற்கான இலங்கை பேச்சுவார்த்தையைத் தொடங்கு வதற்கான புரிந்துணர்வுக் குறிப் பில் கையெழுத்திட்டனர். இஸ்தானாவில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் லீ சியன் லூங், இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனிருந்தனர்.

பிரதமர் லீயின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக திரு விக்ரமசிங்கே சிங்கப்பூர் வந்திருக்கிறார். "இரு நாடுகளுக்கும் இடையே பொருளியல் உறவுகளை ஊக்கு வித்து, வர்த்தகத்தைப் பெருகச் செய்து, இரு நாட்டு நிறுவனங் களுக்கும் கூடுதலான சந்தைப் பயன்பாட்டை வழங்குவதற்கு இரு அரசாங்கங்களும் கொண்டு உள்ள கடப்பாட்டை இலங்கை= சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு பேச்சுவார்த்தை குறிப் பிடுகிறது," என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், நிலையில்லா பொருளியல் சூழலுக்கு மத்தியில் புதிய சந்தைகளில் வாய்ப்புகளைத் தேடும் சிங்கப்பூர் நிறுவனங் களுக்கு இலங்கை ஒரு நல்ல தளமாக விளங்கும் என்றும் அவர் சொன்னார்.

இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங் (பின்வரிசையில் வலது), இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (பின்வரிசையில் இடது) முன்னிலையில் சிங்கப்பூர்=இலங்கை இடையே தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடும் வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரன் (வலது), வளர்ச்சிக் கொள்கைகள், அனைத்துலக வர்த்தகத்திற்கான இலங்கை அமைச்சர் மாலிக் சமரவிக்கிரம. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!