நாய்களைப் பகல் நேரத்தில் பராமரிக்கக்கூடிய நிலையம் ஒன்றில் 'லெப்டோஸ்பைரோசிஸ்' எனப்படும் மஞ்சள் காமாலை நோய்கண்ட நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அந்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்= உணவு, காலநடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ), சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு முதல் இந்நிலையத்தில் பராமரிக்கப்படும் நாய்களில் மஞ்சள் காமாலை நோய்கண்ட நாய்களின் எண்ணிக்கை அதி கரித்து இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தகவல் அளித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
2014ஆம் ஆண்டில் விலங்குகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட தகவல் எதுவும் இல்லாத நிலையில் சென்ற ஆண்டு இரண்டு நாய்களும் இவ்வாண்டு தொடக்கம் முதல் 18 நாய்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. சென்ற மாதம் 27ஆம் தேதிக்கும் இம்மாதம் 14ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 'சன்னி ஹைட்ஸ்' பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தில் உள்ள 12 நாய்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாக 'ஏவிஏ'வுக்குத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த நிலையத்தில் 'ஏவிஏ'வின் அனு மதியின்றி எந்த நாயையும் வெளியேற்றவோ, அனுமதிக்கவோ கூடாது என ஆணையம் தனிமைப்படுத்தும் ஆணையைப் பிறப்பித் துள்ளது. அத்துடன் அந்த நிலை யத்தை முழுமையாகச் சுத்தப்படுத்தி கிருமித் தொற்று நீக்க நடவடிக்கைகளை அது மேற்கொள்ள வேண்டும். 'டர்ஃப் கிளப்' ரோட்டில் உள்ள அந்த நிலையத்தை இம்மாதம் 12ஆம் தேதி பார்வையிட்ட ஏவிஏ அதிகாரிகள் அங்கு எலிகளின் நடமாட்டம் ஏதுமில்லை என்றனர்.