அண்டை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க திருமதி சுரேஷ் தனது 2 வயது குழந்தை, உட்பட குடும்பத்துடன் மாடிப்படிகளின் வழி இறங்க முற்பட்டபோது கொளுந்துவிட்டு எறிந்த தீ அவர்களைத் தடுத்தது. நல்லவேளையாக, தீயணைப்பாளர்களின் உதவியால் தப்பினர். தீச்சம்பவம் கம்பஸ்வேல் சாலையில் உள்ள புளோக் 257Bன் மூன்றாவது மாடியில் புதன்கிழமை அதிகாலை மணி 4.15க்கு ஏற்பட்டது. இந்தச்சம்பவத்தால் சுமார் 20 பேர் வெளியேற்றபட்டனர் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் யா-ருமில்லை. குறும்பு நோக்கத்துடன் தீ வைக்கப்பட்டதாக போலிஸ் இந்தச் சம்பவத்தை வகைப்படுத்தியது.
37 வயது போலிஸ் அதிகாரி சுவாசப்பிரச்சனைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக 'த நியூ பேப்பர்' நேற்று தெரிவித்தது. அந்த நான்கு அறை வீட்டின் அறைகலன் அனைத்தும் தீக்கு இரையானதாகவும் வீட்டில் குடியிருந்தவர்கள் பேட்டி கொடுக்க மறுத்து விட்டதாகவும் 'த நியூ பேப்பர்' தெரிவித்தது. வீட்டில் இருந்தோர் அதிகமான பொருட்களை வீட்டுக்கு வெளியே நிரப்பி வைத்தாகவும் அருகில் வசித்தவர் கூறினார். அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.