முதியவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கேலாங் லோரோங் 23ல் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக காப்பிக்கடை உதவியாளர் ஒருவரைக் கொலை செய்ததாக நேற்று 64 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. டோ சியா குவான் என்ற அந்த ஆசாமி, ஜூலை 9ஆம் தேதி காலை 7.30 மணிக்கும் காலை 8 மணிக்கும் இடையில், 52 வயதுள்ள கோங் எங் தியாம் என்பவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. டோ சியா குவான் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். வழக்கு ஜூலை 29 ஆம் தேதி நீதிமன்றத் துக்கு வரும். தாக்கப்பட்டவரின் தலையில் காதில் இருந்து தலை வரை ஆழமான வெட்டுக் காயம் இருந்தது. அவர் கீழே விழுந்துகிடந்த இடத்தில் மரக்கழி ஒன்று கிடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 64 வயது டோ சியா குவான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!