நகர மன்றங்கள் பொது நிதியை முறையாகக் கையாள்வதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். இதனை தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி வித்தார். நகர மன்றங்கள் சரியான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டுள் ளதை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்படவுள்ளது. நீ சூன் குழுத்தொகுதியைச் சேர்ந்த கெபுன் பாருவுக்கு அவர் வருகையளித்த போது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித் தார். இந்த சட்டத் திருத்தப் பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
அல்ஜுனிட்=ஹவ்காங் நகரமன்றத்தின் கணக்குகளிலும் செயல்பாடுகளிலும் இருந்த குறைபாடுகளைக் கடந்த வாரம் சுயேச்சை தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி அடையாளம் காட்டியது. கடந்த ஐந்தாண்டுகளாக அல்ஜுனிட்=ஹவ்காங் நகரமன்றத்தில் நிர்வாகக் கட்டமைப்பு, நிதிக் கட்டுப்பாடு, நிதி அறிக்கை. கொள்முதல், பதிவுப் பராமரிப்புகள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளே சட்டத்திருத்தத்தின் முக்கி யத்துவத்தை வலியுறுத்தியதாக அமைச்சர் வோங் தெரிவித்தார். சட்ட ரீதியிலான மாற்றம் ஏற்கெனவே நன்கு ஆய்வு செய்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடப்புக்கு வரும் என்று எதிர் பார்க்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆண்டில் பாட்டாளிக் கட்சியின் நகர மன்றக் கணக்குகளில் குறைபாடுகள் இருந்தது அடையாளம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசாங்கம், நகர மன்றங்களுக்கான சட்டம் மறுஆய்வு செய்யப்படுகிறது என அறிவித்திருந்தது.
கெபுன் பாரு தொகுதியில் உள்ள அங் மோகோய உணவங்காடி நிலையம், சந்தைக்கு வருகையளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், உணவங்காடியில் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார். படம்: சாவ் பாவ்