விரைவுச்சாலையில் விபத்து; ஆடவர் பலி

கிராஞ்சி விரைவுச்சாலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளும் காரும் மோதிய விபத்தில் 60களில் இருந்த மோட்டார்சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் அச்சாலையில் பிரிக்லேண்ட் சாலைக்கு வெளி யேறும் வழியை அடுத்து அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்து அதிகாலை 5.30 மணிக்குத் தகவல் கிடைத் ததாகவும் உடனடியாக ஒரு தீயணைப்பு வாகனம், ஒரு சிவப்பு ரைனோ வாகனம், மூன்று அவசர மருத்துவ வண்டிகள், ஒரு துணை வாகனம் ஆகியவற்றை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக வும் சிங்கப்பூர்க் குடிமைத் தற் காப்புப் படை கூறியது.

காரின் அடியில் சிக்கிக் கொண்ட மோட்டார்சைக்கிளோட் டியை குடிமைத் தற்காப்புப் படையினர் நீர்ம அழுத்த சாத னங்களின் துணைகொண்டு மீட் டனர். அந்த ஆடவரைப் பரிசோ தித்த துணை மருத்துவப் படை யினர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய 20 வயது களில் இருந்த ஓர் ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனைக்கும் 40களில் இருந்த மற்றோர் ஆடவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

காருக்கு அடியில் சிக்கியிருந்த மோட்டார்சைக்கிளோட்டியின் உடலை சாதனங்களின் துணைகொண்டுதான் குடிமைத் தற்காப்புப் படையினரால் மீட்க முடிந்தது. படம்: டுவிட்டர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!