பங்களாதேஷுக்குப் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அங்குள்ள உணவுக் கடையில் 20 பேரின் உயிரைப் பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் செல்லும் சிங்கப்பூரர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான, நடப்பு செய்திகளை அணுக்கமாகக் கண்காணிப்பது உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளை ஏற்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு வலுவான ஆலோசனையை நேற்று முன்தினம் வெளியிட்ட பயண அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
நெரிசல்மிகு இடங்களுக்கும் வெளிநாட்டவர் நாடிச் செல்லும் பிரபலமான இடங்களுக்கும் செல்வதை முடிந்தவரை தவிர்க்குமாறும் பயணக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோ சனை வழங்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் செல்வோர் https://eregister.mfa.gov.sg/ எனும் இணையப்பக்கத்தில் பதிவுசெய்துகொள்ள வெளி யுறவு அமைச்சு ஊக்குவிக்கிறது. தூதரக உதவி அவசரமாகத் தேவைப்படுவோர் டாக்காவில்உள்ள சிங்கப்பூர் தூதரகத் துடன் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.