டாக்சி ஒட்டுநர்கள் பல மணி நேரம் வாகனத்தை இடைவிடாமல் ஓட்டுவதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக 'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறு வனம் நேற்று கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 1,000 டாக்சி ஒட்டுநர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் கலந்து கொண்டனர். அதன் பின் னர் 20 நிமிடங்களுக்குத் துரித நடைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். புக்கிட் கோம்பாக் விளையாட் டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர், வெளியுறவு; போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உடற்பயிற்சிக்குப் பிறகு பேசிய அவர், "நமது டாக்சி ஒட்டுநர்கள் அன்றாடம் அமர்ந்து தங்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். களைப்பாறும் நேரம் தவிர அவர்கள் எந்தவிதமான நடவடிக்கை யிலும் ஈடுபடுவதில்லை. ''கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனம் அவர்களின் ஓட்டுநர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை யைப் பின்பற்ற பல தரப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளது என்று அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார். 'கம்ஃபட்டெல்கரோ' நிறுவனம் 'அக்டிவ் எஸ்ஜி'யுடன் இணைந்து நேற்றைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தனது ஒட்டுநர்கள் துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை யைப் பின்பற்ற நிறுவனம் மேலும் சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.
'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனத்தின் அதிகாரிகள், டாக்சி ஓட்டுநர்கள் ஆகியோருடன் நேற்றுக் காலை உடலுறுதிப் பயிற்சியில் ஈடுபட்டார் மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: கம்ஃபர்ட்டெல்குரோ