அலுவலகத்தில் கன்னக்களவு; சந்தேகப்பேர்வழி கைது

போலிஸ், 31 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்திருக் கிறது. லோவர் டெல்டா ரோட்டில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் கன்னமிட்டு திருடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் இந்த ஆடவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது. இந்த விவரங்களை போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. லோவர் டெல்டா ரோட்டில் இருக்கும் புளோக் 1092ல் செயல்படும் ஓர் அலுவலகத்தில் கன்னமிடப்பட்டதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணிக்குத் தனக்கு தகவல் வந்ததாக போலிஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.

அதுபற்றி போலிஸ் புலன்விசாரணை நடத்தியது. அதன் விளைவாக அந்தச் சந்தேகநபர் பிடிபட்டார். அவரை பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தாங்கள் கைதுசெய்ததாக போலிஸ் தெரிவித்தது. புலன்விசாரணை தொடர்வதாகவும் அது கூறியது. குற்றவாளி என்று தீர்ப்பானால் அந்தச் சந்தேகப்பேர்வழி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார். அவருக்கு 14 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!