இம்ப்ரிஸாரியோ லர்னிங் லாப் எனும் மாணவர் பராமரிப்பு நிலை யம் அரசாங்கக் கட்டண மானியங்களைப் 'பலமுறை' முறைகேடாகக் கோரியிருப்பது தெரிய வந்திருப்பதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது. அண்மையில் நடத்தப்பட்ட தணிக்கையின்போது முறை கேடான மானியக் கோரிக்கைகள் கண்டறியப்பட்டதாக அமைச்சு நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கைக் குறிப்பிட்டது. "இவ்விவகாரத்தைக் கடுமையான கண்ணோட்டத்துடன் அமைச்சு கையாளுகிறது. "சிங்கப்பூர் காவல்துறையின் வணிகக் குற்றவியல் பிரிவிடம் இவ்விவகாரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது," என்று அறிக்கைக் குறிப்பிட்டது. புக்கிட் ஹோ சுவீயில் அமைந்திருக்கும் இம்ப்ரிஸாரியோ லர்னிங் லாப் 14 நாட்களுக்குள் அமைச்சிடம் தெளிவான விளக்க மளிக்கவேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், மாணவர் பராமரிப்புக் கட்டண உதவித்திட்ட நிர்வாகி என்ற தகுதியை இழந்துவிடும். அதற்கிடையில், புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர்கள் யாருக்கும் கட்டண உதவிக்கு நிலையம் ஏற்பாடு செய்ய முடியாது. "இந்த நிலவரம் பற்றி விளக்கமளிக்கவும் எங்களது ஆதரவையும் உதவியையும் வழங்கவும் இம்ப்ரிஸாரியோ லர்னிங் லாப் நிலையத்தில் சேர்ந்திருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அமைச்சுக் கடிதம் அனுப்பியுள்ளது," என அறிக்கை தெரி வித்தது. ஜூன் மாதம் நிலையத்தில் சேர்க்கப்பட்ட 14 பிள்ளைகளில் 12 பிள்ளைகள் தற்போது அரசாங்கத்தின் கட்டண உதவி பெறுகிறார்கள்.