கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் சிங்கப்பூர் எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார். முதல் முறையாக நடைபெறும் கடல் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார். கடல் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பூரின் கடல் துறை, துறைமுக ஆணையம் மேற்கொண்டுவரும் சில புதிய நடவ டிக்கைகளையும் அவர் அறி வித்தார். சிங்கப்பூர் நீரிணையை பயன்படுத்தும் மாலுமிகள், படகுப் பயணிகள் ஆகியோருக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு தொடர்பான காணொளி ஒன்று தயாராகியுள்ளது. மலேசியா, இந்தோனீசியா ஆகியவற்றின் கடல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, இந்த காணொளி உருவாக்கப்பட்டது. மேலும் இயந்திரத்தால் இயங்கும் கலன்களுக்கு புதிய கட்டு பாடுகளும் அறிமுகம் காண விருக்கின்றன.
பாதுகாப்பு இயக்கங்கள் மூலம் விபத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் மட்டும் ஒரே ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில், சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியது. இந்த விபத்தால் இரு தரப்பினருக்கும் சேதம் ஏற்பட்டது. "நாம் அடைய வேண்டிய இலக்கை இன்னும் எட்டவில்லை. கடல் பாதுகாப்பை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்," என்றார் அமைச்சர். சிறிய கலன்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க சிங்கப்பூர் புதிய கடப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூரின் கடலைப் பயன் படுத்தும் அனைத்து சிறிய கலன் களும் தானியங்கி அடையாள அமைப்பைக்கொண்ட அலை வாங்கிச் செலுத்தியைப் பொருத்த வேண்டும். மேலும் அனைத்துலகக் கடல்சார்ந்த நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப மின்னியல் அட்டவணை முறையை செயல்படுத்த வேண்டும். இந்தப் புதிய திட்டத்தின் வழி கடலில் செல்லும் கப்பல்கள் அவற்றின் மின்னியல் அட்ட வணை மூலம் சிறு கலன்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும். அதே போல சிறு கலன்களும் பிற கப்பல்களின் நடமாட்டத்தைக் கவனத்தில் கொள்ள முடியும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
இந்தப் புதிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆகும் செலவை சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம் ஏற்றுக்கொள்ளும். பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகளில் பொருத்தப்பட்டிருக் கும் பாதுகாப்பு சாதனங்களின் பாரமரிப்பை மேம்படுத்த தேவை யான வேலைகளை ஆணையம் மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் வட்டாரப் பயணிகள் படகுகள் மீது பரிசோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு இந்தோனீ சியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்த பொருளுடன் மோதியது. இந்த விபத்தில் 51 சிங்கப்பூர்கள் உட்பட 91 பேர் காப்பாற்றப்பட்டனர். இது போன்ற விபத்துகள் நிகழலாமல் இருக்கவே இந்த சிறப்பு ஏற்பாடு. படகுப் பயணிகளுக்கான பாதுகாப்பு காணொளி ஒன்றை ஆணையம் உருவாக்கி வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்துலக கடல்சார்ந்த நிர்வாகமும் அரசாங்கம் சாரா நிறுவனங்களும் தங்கள் திறன் களையும் சிறந்த தொழில் நடை முறைகளையும் பகிர்ந்து கொள்ள சமூகத் தளம் ஒன்றை ஆணையம் ஏற்பாடு செய்யும் என்றும் அமைச்சர் கோ தெரிவித்தார்.
கடல்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கடல் பாதுகாப்பில் பின்பற்ற வேண்டிய சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை அமைச்சர் கோ பூன் வானுக்கும் (இடமிருந்து 3வது) மாநாட்டில் கலந்துகொள்ளும் பங்கேற்பார்கள் ஆகியோருக்கும் விளக்கம் அளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்