சிங்கப்பூரர்களை வாழ்க்கையை முடிந்தவரை வழக்கம்போல் தொடரமாறு துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கேட்டுக்கொண்டுள்ளார். ஸிக்கா வைரஸ் குறித்து கருவுற்ற பெண்கள்தான் அதிகம் கவலைப் பட வேண்டும் என்றாலும் கருவுற்ற காலத்தில் 'மைக்ரோசெஃபலி' மட்டுமல்லாமல் வேறு பல ஆபத்துகளும் உள்ளன என்று அவர் கூறினார். கொசுக்களால் ஏற்படும் நோய் கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடுகளை பாசிர் ரிஸ் வட்டார குடியிருப்பாளர்களிடம் நேற்று அவர் வழங்கினார். ஸிக்கா வைரஸை துடைத்தொழிப்பதற்கு சிறந்த முறை கொசுக்களையும் அவை பெருகும் இடங்களையும் அடியோடு ஒழிப்பதுதான் என்றார் அவர்.
"ஸிக்காவை சரியான முறையில் அணுகுவது முக்கியமானது. தகவல்களைச் சேகரிப்பது, வெளியிடுவது, பிரச்சினையை எதிர்கொள்வது = இதில் கொசுக்களையும் அவை பெருகும் இடங்களையும் அடியோடு ஒழிப்பது," என்று திரு டியோ தெரிவித்தார். கருவுற்ற பெண்கள் குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைத் தவிர, டெங்கியைத் எதிர்கொள்வதைப் போன்றதே ஸிக்காவை எதிர்கொள்வதும்.