சுதாஸகி ராமன்
சென்னையிலிருந்து 20 நாட்களுக்குள் காரில் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றடைய வேண்டும் என்ற திரு அபாஸ் அக்பரின் கனவு, நிலநடுக்கங்கள், வேலைநிறுத்தம் ஆகியவற்றால் ஆட்டம் கண்டது. இந்தியாவில் ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட அவர்களால் தங்கள் பயணத்தைத் தொடர முடியவில்லை. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம் உள்ளதை அவர்கள் அறிந்தபோது பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திவிடலாம் என்று எண்ணினர். இருப்பினும், நண்பர்கள், உறவினர்கள் கொடுத்த ஊக்கம் அவர்களைப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடிக்கச் செய்தது. 'சென்னை2சிங்கப்பூர்' எனும் தனது முதல் முழுநீள தமிழ்த் திரைப்படத்தின் விளம்பரத் திற்காக சிங்கப்பூரரான திரு அபாஸ், படத்தின் இசையமைப் பாளர் ஜிப்ரான், படத்தயாரிப்புக் குழுவினர் சிலர் ஆகியோருடன் இந்தப் பயணத்தை மேற் கொண்டனர்.
இந்தியாவில் தொடங்கி பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என்ற ஆறு நாடுகளைக் கடந்தபோது ஒவ்வொரு நாட்டிலும் படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களை ஒவ்வொன்றாக இவர்கள் வெளியிட்டனர். இயற்கையின் சீற்றத்தால் மட்டும் அவர்களின் பயணம் பாதிப்படையவில்லை. தாய்லாந்து எல்லையைக் கடந்தபோது சரியான வாகன உரிமம் இல்லை என்ற காரணத்தால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர், இந்திய தூதரகங் களின் உதவியோடு சரியான உரிமத்தைப் பெற்று இவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். "பல சவால்களைத் தாண்டி 30 நாட்கள் பயணம் செய்த நாங்கள் நல்ல வேளையாக ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்தினம் சிங்கப்பூர் வந்தடைந்ததால் பண்டிகையை இங்கு என் குடும்பத்தோடு கொண்டாட முடிந்தது," என்றார் அபாஸ்.
சென்னையிலிருந்து ஆரம்பித்த கார் பயணத்தைத் தொடங்கி வைத்த திரைப்பட நடிகர் சூரியா.