மிகக் கடுமையான கண் நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்காததற்காக 59 வயது மருத்துவர் ஒருவர் மூன்று மாதங்களுக்கு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் மருத்துவ மன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கண்களில் உயர்அழுத்தம், சிவப்பு நிறம், பார்வை தெளிவின்மை, தொடர்ந்த தலைவலி, வாந்தி ஆகிய பிரச்சினைகளுக்காக 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட்டில் இருக்கும் 'நன்யாங் சென்டர் கிளினிக்'கில் பணியாற்றிய பொதுமருத்துவர் வான் வாய் யின்னை சிகிச்சைக்காக நாடினார் அந்தப் பெண்.
மருத்துவர் சரியாகப் பரிசோதனை செய்யாததால் மார்ச் மாதம் 26ஆம் தேதிதான் அவ ருக்கு 'க்ளவ்கோமா' பாதிப்பு இருந்தது வேறொரு மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அப்பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. நோய் குறித்து போதுமான தகவல்களை அளிக்காதது, சரியாகப் பரிசோதிக்காதது, சிறப்பு மருந்தகத்துக்குச் செல்ல அறிவுறுத்தா தது என 3 குற்றச்சாட்டுகள் மருத்துவர் ஃபோங் மீது பதிவாகின.