ஸிக்கா: புதிய உத்தேச தொற்றுப்பகுதி

இம்மாதம் 17ஆம் தேதி முதல் நேற்று வரை சிங்கப்பூரில் 12 புதிய ஸிக்கா கிருமித் தொற்று சம்பவங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை ஸிக்கா கிருமித் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 381 என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஹவ்காங் அவென்யூ 7 பகுதியில் இரண்டு புதிய ஸிக்கா சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது புதிய உத்தேச கிருமித் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே ஸிக்கா கிருமித் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் அல்ஜுனிட்டில் மூன்று புதிய சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன.

அந்தப் பகுதியில் மட்டும் நிகழ்ந்த ஸிக்கா சம்பவங்களின் எண்ணிக்கை 286. சிக்லாப்பில் உள்ள இலிட் டெரஸ் பகுதியில் மேலும் இரு சம்பவங்கள். இதையும் சேர்த்து அங்கு இதுவரை 13 சம்ப வங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது சிங்கப்பூரில் ஒன்பது ஸிக்கா கிருமித் தொற்றுப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தேசிய சுற்றுப்புற வாரி-யத்தின் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!