இரண்டு நாள் தண்ணீர் தட்டுப்பாட்டை அடுத்து தெம்பனிஸில் மீண்டும் சேவை தொடக்கம் தெம்பனிஸில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடத்தின் தண்ணீர் விநியோகம் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக் குப் பிறகு நேற்று மதியம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியது. சனிக்கிழமை பிற்பகலில், தெம் பனிஸ் சென்ட்ரல் 1 புளோக் 508க்கு அருகிலுள்ள சாலையின் மேற்பரப்பில் தண்ணீர் ஒழுகுவ தைக் குடியிருப்பாளர் ஒருவர் கவ னித்ததாகத் தெம்பனிஸ் நகர மன் றத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரி வித்தார்.
தண்ணீர் எங்கிருந்து ஒழுகு கிறது என்பதைக் கண்டுபிடிக்க நகர மன்றக் குத்தகையாளர்களும் அதிகாரிகளும் முயன்று வந்த போது, சில வீடுகளின் தண்ணீர் விநியோகம் இடையிடையில் துண் டிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு ஏழு மணிக்குத் தண்ணீர் விநி யோகம் தற்காலிகமாக வழக்க நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாக நகர மன்றம் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை, குழாய்களைப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, எரிவாயு குழாயும் சேதமடைந்தது. தண்ணீர் விநியோகத்தில் எரிவாயு கலந்துவிடக்கூடும் என்ற அக்க றையால், அந்த நான்கு மாடிக் கட் டடத்தின் தண்ணீர் விநியோகத் தைத் துண்டித்துவிட்டு, பழுதுபார்ப் புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மொத்தம் 48 வீடுகள் பாதிக்கப்பட்டதாக நகர மன்றம் தெரிவித்தது.
ஊழியர்கள் தண்ணீர் குழாயில் பழுதுபார்ப்பு வேலைகளைச் செய்கின்றனர். படம்: வான் பாவ்