தீமிதித் திருவிழா 2016

இவ்வாண்டு தீமிதித் திருவிழா அடுத்த மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சவுத் பிரிட்ஜ் சாலை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தலைமைப் பண்டாரம் புறப்பட்டுச் செல்வார். இரவு 8 மணி அளவில் அவர் தீக்குழியைக் கடப்பார் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீக்குழியைக் கடந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். தீமிதித் திருவிழாவுக்கு முன்பாக அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று சிறப்பு விரத வழிபாடு நடத்தப்படும்.

அக்டோபர் மாதம் 7ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்யலாம். தீமிதி நாளான 23ஆம் தேதியன்று கோயிலில் கும்பிடுதண்டம், அங்கப்பிரதட்சனம் ஆகியவற்றை செய்ய முடியாது. அடுத்த மாதம் 7ஆம் தேதியிலிருந்து பக்தர்கள் மாவிளக்கு செலுத்தலாம். தீமிதித் திருவிழாவை முன்னிட்டு அடுத்த மாதம் 21, 22ஆம் தேதிகளில் ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும். தீமிதத் திருவிழாவுக்கு மறுநாள் இரவு சுமார் 8 மணிக்கு சிராங்கூன் சாலையில் திரௌபதி அம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!