மசெக சமூக அறநிறுவனத்தின் கிளை ஒன்றின் முன்னாள் நிர்வாகி, சுமார் இரண்டு ஆண்டு காலமாக அறநிறுவனத்தின் $25,912 பணத்தைத் தவறாகக் கையாண்டதற்காக நேற்று நீதிமன்றம் நான்கு மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிசிஎஃப் தாம்சன் - தோ பாயோ கிளையில் பணிபுரிந்தபோது இமெல்டா வேணி அந்தோணி என்ற 33 வயது பெண், 2012 முதல் 2014ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார். இப்போது மேக்டலின்'ஸ் கின்டர்கார்டன் என்னும் பாலர் பள்ளியின் முதல்வராக இவர் பணியாற்றுகிறார். 1.4.2012 முதல் 31.12.2012 வரை அறநிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தைத் தவறாகக் கையாண் டதை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
$11,406, $3,177 ஆகிய தொகைகள் தொடர்பான இதுபோன்ற மேலும் இரு குற்றங்களும் தண்டனை அளிக்கும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன. அறநிறுவனத்தின் பணத்தை தனது பட்டப்படிப்புக்காகவும் கடன் அட்டை பட்டுவாடா, தினசரி செலவு போன்றவற்றுக்காகவும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். தான் தவறாகக் கையாண்ட $25,912 பணத்தை அவர் இப்போது திருப்பிக் கொடுத்துள்ளார்.