மெரினா பே சாண்ட்சின் பேஃபிரண்ட் அவென்யூவில் நடந்து கொண்டிருந்த 70 வயது முதியவரை வேகமாக வந்த டாக்சி மோதியது. வாகனம் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்த அந்த முதியவர் டாக்சி வேகமாக வருவதைக் கண்டு பின்னோக்கி நடந்தார். ஆனால், வேகமாக வந்த டாக்சி அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த முதியவர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். நேற்று பிற்பகலில் நடந்த அந்த சம்பவத்தில் முதியவரும் 52 வயது டாக்சி ஓட்டியும் காயம் அடைந்தனர். சுயநினைவோடு இருந்த இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்தது.
டாக்சி மோதி முதியவர் காயம்
25 Sep 2016 05:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Sep 2016 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!