ஜப்பானியப் பேரரசர் அக்கிஹிட் டோவும் பேரரசி மிச்சிகோவும் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அதிகாரத்துவ பகல் விருந்து வழங்கி சிறப்பிக்க விருக்கின்றனர். பிரதமர் லீ நான்கு நாள் அதிகாரத்துவ தோக்கியோ பயணத்தை நேற்று தொடங்கினார். ஜப்பானியப் பேரரசரும் அவரது துணைவியும் ஆகக் கடைசியாக 2007 மார்ச் மாதம் திரு லீக்கு தேநீர் விருந்துபசரிப்பு நடத்தினர். சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 50 ஆண்டுகால அரசதந்திர உறவின் அடையாள மாகத் திரு லீயின் பயணம் திகழ்கிறது. சென்ற ஆண்டு மார்ச் மாதம் காலமான முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் சார்பில், வெளிநாட்டுப் பிரமுகருக்கான ஜப்பானின் உயரிய கௌரவத்தைத் திரு அபேயிடமிருந்து திரு லீ பெற்றுக்கொள்வார்.
இருநாட்டு உறவின் வளர்ச் சிக்குத் திரு லீ குவான் இயூ பல ஆண்டுகாலம் ஆற்றிய பங்களிப் புக்காக மதிப்புமிக்க பவ்லாவ்னியா மலர் கிராண்ட் கோர்டன் விருது வழங்கப்படுகிறது. ஜப்பான் அவருக்கு வழங்கும் இரண்டாவது விருது இது. முன்னதாக 1967ம் ஆண்டு உதய சூரியன் கிராண்ட் கோர்டன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர். புதன்கிழமை நடைபெறும் இருதரப்பு மாநாட்டின்போது திரு அபே பிரதமர் லீயிடம் விருதை வழங்குவார். அதன்பிறகு, பிரதமர் லீக்கும் சிங்கப்பூர் பேராளர்க ளுக்கும் விருந்து நடத்தப்படும்.