கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் வயதான பெண்களில் 40 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே மார்பகப் புற்றுநோய் குறித்த மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி 50 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 38.9 விழுக்காட்டினரே இந்தப் பரிசோதனையை மேற் கொண்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள் ளது. சிங்கப்பூரில் பெண்களிடம் மார்பகப் புற்றுநோய் பரவலாகக் காணப்படும் நிலையிலும் பாதிக்கும் குறைவானவர்களே பரிசோத னையை மேற்கொள்கின்றனர். சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் விவரங்களின்படி 2010ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 9,274 பேருக்குப் புதிதாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மெமோகிராம் எனப்படும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முறை நம்பகத்தன்மையானது. இது, மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் கைகளால் உணரக்கூடிய நிலைக்கு முந்திய நிலையிலேயே கண்டறியக் கூடியது. முன்கூட்டியே கண்டறிவதால் புற்றுநோயிலிருந்து குணம்பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள பெண்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். முன்னரே கண்டறிந்தால் சிறிய துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யலாம், ஒரு தடவை கதிரியக்க சிகிச்சை போதுமானது, 'கீமோதெரபி' வேண்டியதில்லை என்று சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் மருத்துவர் வெரோனிக் டான் கூறினார். மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உரைகள், கருத்தரங்குகள், சாலைக் காட்சிகள் எனப் பல நடவடிக்கைகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன.