நீதிமன்ற ஆணையை அவமதித்த குற்றத்திற்காக அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று ஒரு வார காலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப் பளித்தது. சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திற்கு இழப்பீடாகச் செலுத்தும்படி நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை அவமதிக்கும் வகையில் அந்தத் தொகையான $500,000ஐ செலுத்தத் தவறிய மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று இந்தத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. டாக்டர் பாங் ஆ சான் (படம்) என்ற அந்த மருத்துவர், ஒரு தனியார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர். நினைவாற்றல் இழந்து வாடும் தனது தாயைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டும் தனது நோயாளி களின் சிகிச்சைக்கான மாற்று ஏற்பாடு செய்யும் பொருட்டும் அவரது தண்டனையை அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவர் பாங் மீது இரண்டு வெவ்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விசார ணையில் அவர் மருத்துவ ஒழுங்கு நெறிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. மருத்துவ நெறிமுறைகளின்படி தொழில்ரீதியாக அங்கீகரிக்கப் படாத சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் கையாளக் கூடாது. அந்த முறையில் மருத்துவர் பாங், 2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் வயிற்றுக்கோளாறு பிரச்சினைக்காக வந்த சில நோயாளிகளின் வயிற்றின் உட்புற சோதனைகளுக்கு, மருத்துவத் துறையில் அங்கீகரிக்கப்படாத எண்டோஸ்கோப்பிக் குழாயை வாய் வழியாக வயிற்றுக்குள் செலுத்தி சோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புகாரையடுத்து சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 2010 செப்டம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் அவர் அங்கீகரிக்கப்படாத சோதனைக் குழாய் கருவியைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்தச் சோதனைக் குழாய் கருவியை உள்வாங்க முடியாத நிலையில் இருந்த நான்கு மூத்த நோயாளிகளிடம் டாக்டர் பாங் சோதனை மேற்கொண்டிருக்கிறார். இது இவரால் புதிதாக உருவாக்கப்பட்ட சோதனைக் குழாய்க் கருவியாகும்.