ஜப்பானிய நிறுவனங்கள் சிங்கப்பூரை இந்த வட்டாரத்தின் வலுவான விற்பனைத் தளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வர்த்தகம், தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்திருக்கிறார். புத்தாக்க உருவாக்கத்தில் வலுவான நிலையில் உள்ள இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பலனடைந்து கொள்ளலாம். புத்தாக்கங்களை உருவாக்கும் நோக்கில் ஜப்பானிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் தொழில் பங்காளிகளை இணைக்கும் சூழலை சிங்கப்பூர் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளின் 50 ஆண்டு கால நல்லுறவைக் குறிக்கும் வகையில் வர்த்தக மாநாடு நடத்தப்படுவதை அமைச்சர் சின் குறிப்பிட்டார். 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ், ஜப்பானிய ஊடகக் குழுமமான 'நிக்கெய் பப்ளிகேஷன்ஸ்' ஆகியவை இணைந்து அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
ஜப்பானிய தோல் பராமரிப்பு உற்பத்தியான 'எஸ்கேII' சிங்கப்பூ ருக்கு வெளியிலும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளது. அதனுடைய தொடர் உருவாக்கமான 'எஸ்கேII மென்' சிங்கப்பூர் நிறுவனங்கள் மூலமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஜப்பானின் தகவல், தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான என்இசி, 2013ஆம் ஆண்டில் சிங் கப்பூரில் புதிய பொது பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கும் சோதனைத் திட்டத்தின் ஒருங்க மைப்புக்குத் தலைமை தாங்கியதை அமைச்சர் சிம் சுட்டிக் காட்டினார். ஆசியான், சீனா, இந்தியா ஆகிய மிகப்பெரும் சந்தைகளை அருகாமையில் கொண்டுள்ளது சிங்கப்பூரின் சொத்து என அவர் கூறினார். அதன் காரணமாகவே ஜப்பானிய மருந்துவகை உற்பத்தியாள ரான டாகெடா, சிங்கப்பூரில் அதன் தலைமையகத்தை அமைப்பதாக அறிவித்தார். அதைப் போலவே விநியோகச் சேவை வழங்கும் ஜப்பானிய நிறுவனமான டா-கி-பின், இந்த வட்டாரச் சந்தையை ஆய்வு செய்வதற்காக இங்கு ஒரு மையத்தைத் தொடங்கியுள்ளதையும் அமைச்சர் சிம் சுட்டிக் காட்டினார்.