மானபங்கக் குற்றத்திற்காக ஆடவருக்கு 11 ஆண்டுகள் சிறை

சிலோசோ கடற்கரையில் குடிபோதை யில் இருந்த 20 வயது மாதுவை மானபங்கப்படுத்திய 27 வயது ஆடவருக்கு நேற்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. பிரேம் நாயர் (படம்) என்ற அந்த ஆடவர் செந்தோசா கடற் கரையில் சுற்றுக்காவல் அதிகாரியாக இருந்தபோது இந்தக் குற்றத்தைப் புரிந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம்தேதி அந்த மாது தனது தோழி யுடன் கடற்கரையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மது அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் பிரேம் அவர்களிடம் பேச்சுக் கொடுத்து 'மது விளையாட்டு' விளையாட அழைத்தார். மதுவைத் தொடர்ந்து அருந்திய வுடன் அந்த மாது மயக்கநிலை அடைந்தார். பின்னர் வீடு திரும்ப எண்ணம் கொண்டு அவரது தோழி கைப்பை எடுக்கச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் பிரேமையும் அந்த மாதுவையும் காணவில்லை. அதன் பின்னர் கடற்கரையில் இன்னொரு பகுதியில் பிரேம் தன்னுடன் அழைத்து சென்ற மாதுவை மானபங்கம் செய்தார். அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதைப் பார்த்த இருவர் போலிசுக்குத் தகவல் அளித்தனர். பிரேம் பின்னர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!