அனுமதி இன்றி பந்தயம்: இருவருக்குத் தண்டனை

போலிசின் அங்கீகாரமும் அனுமதியும் இல்லாமல் சட்டவிரோத மாக சைக்கிள் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்து பந்தயத்தை நடத்திய இரண்டு பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக் கிறது. முன்னாள் சைக்கிள் கடை உரிமையாளர் எரிக் கூ ‌ஷி யான், 29, திட்டத்துறை நிர்வாகி ஸுல்கிஃப்லி அவாப், 40, என்ற அந்த இருவரும் தலா நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் சென்ற ஜூன் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவருக் கும் ஏழு நாள் சிறைத்தண்ட னையும் $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இருவருக்கும் எதிரான இதர 12 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தத்தில் அந்த இரு வரும் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் எட்டு பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரி விக்கப்பட்டது.

அந்தச் சைக்கிள் பந்தயத் திற்கு 'ஹோலிகிரிட்' என்று பெயர். தங்கள் கட்சிக்காரர் களுக்குப் பெயரளவிலான சிறைத்தண்டனை விதிக்கும்படி இந்த இரண்டு பேரின் சார்பிலும் முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண் டனர். தண்டனை விதித்த மாவட்ட நீதிபதி கரோல் லிங், இருவருக் கும் தலா இரண்டு நாள் சிறைத் தண்டனை விதித்தால் அது போதுமானதாக இருக்காது என்று தான் கருதுவதாகத் தீர்ப் பில் குறிப்பிட்டார்.

சைக்கிள் கடை உரிமையாளர் எரிக் கூ (வலது) நிர்வாகி ஸுல்கிஃப்லி அவாப் இருவருக்கும் தலா ஏழு நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $5,000 அபராதமும் இவர்கள் செலுத்த வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!