சாலை விபத்தில் பாதசாரி மரணம்

வெளிநாட்டு ஊழியர் என்று நம்பப்படும் பாதசாரி ஒருவர் சாலை விபத்தில் நேற்று மாண்டார். கெப்பல் சாலையில் கார் ஒன்று அவரை மோதித் தள்ளியது. தஞ்சோங் பகார் ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று காலை 10.15 மணி அளவில் சாலை விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அந்த 35 வயது ஆடவர் இறந்ததாக போலிஸ் உறுதிப்படுத்தியது. பாதசாரியை மோதிய வாகனம் ஆயர் ராஜா விரைவுச்சாலைக்கு கீழே உள்ள பள்ளத்தில் கிடந்தது. 31 வயது வாகனமோட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்து நடந்த இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு ஆம்புலன்ஸ்கள், ஒரு சிவப்பு ரைனோ வாகனம் அனுப்பப்பட்டன. போலிஸ் விசாரணை தொடர்கிறது. படம்: ‌ஷின்மின்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!