இணையச் சூதாட்டம் உட்பட மொத்தத்தில் சூதாட்டத்தின் கடும் விளைவுகள் பற்றியும் சூதாட்டம் என்பது இஸ்லாத்தில் கண்டிப்பாக தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் முஸ்லிம் தலைவர்கள் தங்கள் முஸ்லிம் சமூகத்தினருக்கு நினைவூட்டி உள்ளனர். சிங்கப்பூரின் முஃப்தி டாக்டர் முகம்மது ஃபட்ரிஸ் பக்காரத்தின் தலைமையிலான முஃப்தி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையை நேற்றைய வெள்ளிக் கிழமை பகல்நேர தொழுகை பிரசங்கத்தின்போது பள்ளிவாசல்களின் இமாம்கள் வாசித்து காட்டினார்கள்.
இணையச் சூதாட்டம் தற்போது மிகவும் கவலை தரும் போக்காக மாறியுள்ளது என்று முஃப்தி அலு வலகம் வர்ணித்துள்ளது. "சூதாட்டம் தனி ஒருவரை மட் டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும். ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாகி விட்டால், அவர்கள் தங்கள் சுயகட்டுப்பாட்டை இழக்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடும்," என்று பிரசங்கத்தில் கூறப்பட்டது.
சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத் துக்குத் தேவையான சமூக-சமய வழிகாட்டிகள் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின் மூலம் தெரிவிக்கப் படுகின்றன. இணையச் சூதாட்டச் சட்டம் ஈராண்டுகளுக்கு முன் நாடாளு மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தைத் தொடர்ந்து உள்துறை அமைச்சு கடந்த மாதம் சிங்கப்பூ ரைத் தளமாகக் கொண்ட இரு சூதாட்டப் பந்தய நடத்துநர்களுக்கு அனுமதி வழங்கிய பிறகு முஸ்லிம் சமூகத்திடமிருந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
மேற்கண்ட சட்டம் அனைத்து இணைய, தொலைபேசி மூலம் நடத்தப்படும் பந்தயப் பிடிப்பு நட வடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கிறது. சூதாட்டப் பந்தயப் பிடிப்பு நடத்துநர்களில் ஒன்றான சிங்கப் பூர் பூல்ஸ் நிறுவனம் தனது இணையச் சூதாட்டப் பந்தயப் பிடிப்பை இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கு கிறது. மற்றோர் நிறுவனமான சிங் கப்பூர் குதிரைப் பந்தயச் சங்கம் தனது புதிய பந்தயப் பிடிப்பு நடவடிக்கையை இணையம் மூலமாகவும் கைபேசி மூலமாகவும் நவம் பர் 15ஆம் தேதி தொடங்கும்.