வில்சன் சைலஸ்
தமிழ்மொழிக் கற்பித்தலின் கடந்தகால வளர்ச்சியை ஆராய்ந்து நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்களிடம் மொழி சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தமிழா சிரியர் சங்கம் நேற்று முன்தினம் ஈடுபட்டது. தமிழ்மொழி கற்பித்தலுக்கான அணுகுமுறை கடந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள் ளது என்பதையும் தற்போதைய சூழலில் தமிழாசிரியர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் பற்றி கலந்துரையாடுவதற்கு ஆய்வ ரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது சங்கம்.
'சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி-நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில், 'த ஹெட் ஃபவுண்டேஷன்' அமைப்பின் கல்வி இயக்குநரான பேராசிரியர் எஸ் கோபிநாதன் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு பல் லின மொழிகள் கொண்ட சிங்கப் பூரில் தமிழ்மொழியைக் கட்டிக் காக்கும் அவசியத்தை எடுத்து ரைத்தார்.
"உலகமயமாகிவரும் சூழலில் மொழிகளின் மீதுள்ள ஆர்வத்தை இளையர்களிடம் ஏற்படுத்துவது சவாலான ஒன்று. ஆனால், பல் லின மக்கள் வாழும் சிங்கப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்குத் தமிழ்மொழி ஓர் அடையாளம்," என்றார் அவர். இத்துடன், தனிப்பட்ட விதத் தில் அனைவரும் இருமொழித் திறன் கொண்டவர்களாகத்தான் திகழ்கின்றனர் என மேலும் கூறிய திரு கோபிநாதன், நான்கு அதிகாரத்துவ மொழிகள் கொண்ட சிங்கப்பூரில் ஆசிரியர்கள் தமிழ்மொழியை மாணவர் களுக்குக் கற்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றார்.
தாய்மொழிக் கொள்கைகள் பற்றி பேராசிரியர் கோபிநாதன் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை களையும் அடிப்படையாகக் கொண்டு தமிழாசிரியர்கள் தங் கள் சுய ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்தனர். 'கல்வியில் மொழிக்கொள்கை, தாய்மொழிப் பாடமாகத் தமிழ் மொழி', 'சிங்கப்பூர் தமிழ்மொழி குடும்பமொழியாவதும் பயன்படுவ தும்', 'சிங்கப்பூரில் இருமொழிய மும் இருமொழிக் கல்வியும்' என்ற தலைப்புகளின் கீழ் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் கட்டுரைகளைப் படைத்தனர்.
'சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வி-நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் உரையாற்றுகிறார் பேராசிரியர் எஸ் கோபிநாதன் (வலது). படம்: சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்