தரவையும் அறிவியலையும் பயன் படுத்தி உள்துறை அதிகாரிகளின் பணித்திறனை மேம்படுத்தி, பணி யைச் சுலபமாக்கும் வழிமுறைகளை ஆராய புதிய நிலையம் நேற்று தொடங்கப்பட்டது. சாமர்த்தியமான கண்காணிப்பு முறைகள், மெய்நிகர் பயிற்சி, உள் துறை அதிகாரிகளின் பணிச்சூழல் சார்ந்த உடலியல், மனோவியல் தேவைகள் போன்றவற்றைப் புதிய நிலையம் ஆராயும். அதிகாரிகளின் சோர்வைச் சமாளித்தல் போன் றவை இதில் உள்ளடங்கும். பழைய சுவா சூ காங்கில் உள்ள உள்துறை பயிற்சிக் கல் லூரியில் அமைந்திருக்கும் புதிய நிலையம், அறிவியல், தொழில் நுட்பம், அதிகாரிகளின் செயல் திறன் பற்றிய தரவு ஆராய்வுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அடித்தளப் பணிகளுக்கு அதிகாரி கள் பயன்படுத்தும் செயல்முறைகளும் சாதனங்களும் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தும்.
நான்கு அறை வீட்டின் அள விலான இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையம், பாரம் பரிய முறைகளிலிருந்து வேறுபடும் பயிற்சி முறைகளையும் உருவாக் கும். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் பாவனைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களது கண் அசை வும் பதில்நடவடிக்கைகளும் கண் காணிக்கப்படும். ஆளில்லாமல் இயங்கும் சாதனங்களைக் கட்டுப் படுத்தவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படலாம்.
உள்துறைக் குழு அதிகாரிகளின் பணி குறித்த அறிவியல், தொழில்நுட்ப ஆற்றல்களை மேம்படுத்தும் புதிய நிலையத்தை நேற்று தொடங்கி வைத்த சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்துக்கும் உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினுக்கும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்