'டிஎச்எல் எக்ஸ்பிரஸ்' புதிய $140 மில்லியன் மையத்தை சாங்கி விமான நிலையத்தின் சரக்கு மையத்தில் நேற்று திறந்து வைத் தது. தெற்காசிய வட்டாரத்தின் விமான சரக்குப் போக்குவரத்து மையமாகத் திகழும் 'டிஎச்எல்' தெற்காசிய மையம் 24 மணி நேரமும் தானியக்க முறையில் இயங்கும். அந்த நிறுவனத்தின் ஆகப்பெரிய சிங்கப்பூர் முதலீடு இது என்று தெரிவிக்கப்பட்டது. 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் அந்த மையம் அமைந்துள்ளது. தானியக்க முறையில் விரைவாகப் பொட்டலங்களை வரிசைப் படுத்தும் சேவையை முதன் முதலாக தெற்காசியாவில் பயன்படுத்தும் நிறுவனம் அது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் துரிதச் சேவையால் தனது வாடிக்கையாளர்கள் பயன் அடைவார்கள் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.
முழுமையான தானியக்க முறை யில் செயல்படுவதால் ஒரு மணி நேரத்திற்கு 24,000 சரக்குகளையும் ஆவணங்களையும் வகைப்படுத்த முடியும். இந்தப் புதிய மையத்தில் இவ் வாண்டு இறுதிக்குள் 250 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக நிறுவனம் தெரிவித் தது. தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி உற்பத்தித் திறனை நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் ஊக்குவிக்கும் வேளையில் இந்த மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. "இந்த வட்டாரத்தில் ஹாங்காங், பேங்காக், ஷாங்காய் ஆகிய நகரங்களில் கிளை நிறுவனங் களை இயக்கி வரும் 'டிஎச்எல் எக்ஸ்பிரஸ்' மலேசியா, இந் தோனீசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் சேவை அளிக்கும்," என்று தெரிவித்தார் 'டிஎச்எல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டார தலைமை நிர்வாக அதிகாரி கென் லீ.
டிஎச்எல் ஊழியர் ஒருவர் விமான சரக்கைத் தயார்ப்படுத்துகிறார். படம்: டிஎச்எல்