விபத்தில் ஐவர் காயம்

உட்லண்ட்சில் புதன்கிழமை காலை நேரத்தில் டாக்சியும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 6, உட்லண்ட்ஸ் டிரைவ் 65 இரண்டும் சந்திக்கும் இடத்தில் காலை 6.30 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நிகழ்ந்ததையடுத்து டாக்சி ஓட்டுநர் அந்த வாகனத்தின் உள்ளே மாட்டிக்கொண்டார்.

அவரை குடிமைத் தற்காப்புப் படை மீட்டது. காயம் அடைந்த நால்வரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்னர் என்று இந்தப் படை தெரிவித்தது. விபத்தில் சிக்கிய டாக்சி ஓட்டி தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார் என்று தெரியவந்தது. காயம் அடைந்த நால்வரும் டாக்சி பயணிகள். பயணிகளில் மூன்று பேரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்ததையடுத்து குடிமைத் தற்காப்புப் படை நான்கு மருத்துவ வண்டிகள் உட்பட பல வாகனங்களை அங்கு அனுப்பியது. இந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடப்பதாக போலிஸ் தெரிவித்தது.

உட்லண்ட்சில் டாக்சி ஒன்றும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளாயின. படம்: ஃபேஸ்புக்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!