நோயாளிக்கு விரிவான சிகிச்சை கட்டணப் பட்டியல் தர ஏற்பாடு

சமூக சுகாதார உதவித் திட்டத் தில் கலந்துகொண்டுள்ள தனியார் மருத்துவர்களிடம், பல் மருந்தகங் களில் மானியத்துடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒவ் வொன்றையும் விளக்கும் விரிவான கட்டணப் பட்டியலை அத்தகைய அனைத்து தனியார் மருத்துவர் களும் பல் மருந்தகங்களும் கொடுக்க வேண்டியது 2017 ஜன வரி 1 முதல் கட்டாயமானதாகிறது. சுகாதார அமைச்சு நேற்று இதனை அறிவித்தது. மருந்தகங்கள் வசூலிக்கும் கட்டணம்=நோயாளிக்கு கிடைக் கும் மானியம் ஆகிய இரண்டும் ஒளிவுமறைவு இல்லாமல் தெரிய வந்தால் மருந்தகங்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அதிகமாகும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக் டர் லாம் பின் மின் தெரிவித்தார்.

மருத்துவரைப் பார்ப்பதற்கான கட்டணம், மருந்துக்கான கட்ட ணம், மருத்துவச் சோதனைக்கான கட்டணம், மற்ற கட்டணங்கள் எல்லாம் தனித்தனியாகக் குறிப் பிடப்பட்டு, மானியத்தைக் கழிக் காமல் மொத்த கட்டணம், எவ்வளவு என்பது பட்டியலில் தெரிவிக்கப்படவேண்டும். கிடைக்கக்கூடிய மானியம் எவ்வளவு என்பதையும் கட்டணப் பட்டியல் குறிப்பிட வேண்டும்.

மானியம் போக நோயாளி செலுத்தவேண்டிய தொகை எவ்வளவு என்பதும் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. முழு மானியம் பெறுகின்ற, கையில் இருந்து பணத்தைக் கொடுக்காத நோயாளிகளுக்கும் இத்தகைய விவர பட்டியலைத் தர வேண்டும். இப்பொழுது இத்தகைய பட்டியலை சில மருந்தகங்கள் கொடுப் பதில்லை. கேட்டால் மட்டுமே இத்தகைய பட்டியலை அவை கொடுக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!