வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலை யில் பாண்டான் கிரசெண்ட் சாலைச் சந்திப்பில் நேற்று முன் தினம் நள்ளிரவுக்கு முன்னால் நிகழ்ந்த மோசமான விபத்தில் இருவர் மாண்டனர். மின் சைக்கிள்களில் மூவர் அவ்வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கனரக கொள்கலன் லாரி யுடன் அவர்கள் மோதினர். அதில் 25 வயது மின் சைக்கி ளோட்டி ஒருவர் சம்பவ இடத் திலேயே மாண்டார்.
இரவு 11.59 மணிக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் காயமுற்ற மேலும் இருவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் 18 வயது மதிக்கத்தக்க மேலும் ஓர் ஆடவர் மரணமடைந்தார். மூன்றாவது நபரான 17 வயது ஆடவர் காயங்களுடன் தப்பி னார். கவனக்குறைவால் மரணம் விளைவித்த குற்றத்திற்காக 34 வயது கனரக வாகன ஓட்டுநர் கைதானார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.
பாண்டான் கிரசெண்ட்டில் நிகழ்ந்த மோசமான விபத்தில் மின் சைக்கிளில் பயணம் செய்த மூவரில் இருவர் மரணமடைந்து விட்டனர்.