மலேசியக் கடலில் அனுமதியின்றி முக்குளித்த இரு ஆடவர்கள் கைது

சிங்கப்பூரர் ஒருவரும் ஜெர்மானிய ஆடவர் ஒருவரும் சென்ற சனிக்கிழமை மாலை மலேசியாவுக்குச் சொந்தமான கடற்பகுதியில் அனுமதியின்றி முக்குளித்தற்காக மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூருக்குச் சொந்தமான பெட்ரா பிராங்கா தீவுக்கு அருகே உள்ள 'மிடல் ராக்ஸ்' பாறைக்கு அருகே அவர்கள் முக்குளித்தனர் என்று மலேசிய கரையோரக் காவல் படை நேற்று தெரிவித்தது.

49 வயது ஜோன் கொச்லொவிசும் 29 வயது முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளரான அஞ்சாஸ்மரா முகமது காலிட் என்ற சிங்கப்பூரரும் ஜோகூரில் உள்ள செடிலி எனும் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் தங்களின் முக்குளிப்பு நடவடிக்கையை 'சவுத் லேச்' பாறைக்கு அருகே தொடங்கியதாகவும்பின்னர் அவர்கள் 'மிடல் ராக்ஸ்' பாறைக்கு அருகே சென்றதாகவும் கூறினர். அது முக்குளிப்பதற்கு ஆபத்தான பகுதி. தற்போது அவர்களுக்கு சேவையாற்றிய முக்குளிப்பு நிறுவனத்துடனும் அவரவர் தூதரகங்களுடனும் விளக்கம் கேட்டிருப்பதாக மலேசியாவின் கடல்துறை அமலாக்க அமைப்பின் இயக்குனர் அகமது புஸி கஹார் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!