காசோலைமோசடி செய்த இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு 21 மாதச் சிறை

இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியின் கையெழுத்தைக் கள்ளத்தனமாக 42 காசோலைகளில் போட்டு $108,315 பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக அவருக்கு 21 மாதச் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. 37 வயது ஆய் டேட்டி என்ற அந்தப் பணிப்பெண் 10 மோசடிக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். திருவாட்டி யோங் ஃபொங் பெங் என்ற அந்த 68 வயது முதலாளியிடம் ஆய் டேட்டி 13 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015 மே மாதத்தில் அவரது முதலாளியின் வங்கி காசோலைப் புத்தகத்தை அவர் திருடினார். அதன் பின்னர் அவர் காசோலைகளில் தனது முதலாளியின் கையெழுத்தைப்போட்டு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கத் தொடங்கினார். எடுத்த பணத்தை சூதாட்டத்திலும் இந்தோனீசியாவிற்கு அனுப்புவதிலும் செலவு செய்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருவாட்டி யோங் தனது வங்கியின் கணக்குப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். தனது கணக்கிலிருந்து சந்தேகத்திற்குரிய முறையில் பணம் எடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து போலிசில் புகார் அளித்தார். ஆய் டேட்டிக்கு ஒவ்வொரு கையெழுத்து மோசடி குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!