தீபாவளி காலத்தின்போது மாட்டிறைச்சி சலுகை: ‘கோல்ட் ஸ்டோரெஜ்’ மன்னிப்பு

தீபாவளி காலத்தின்போது தனது பேரங்காடி ஒன்றில் மாட்டிறைச்சி சலுகையை விளம்பரப்படுத்தியதற்காக 'கோல்ட் ஸ்டோரெஜ்' நிறுவனம் நேற்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கலாம் என்று அது தனது அறிக்கையில் கூறியது. அந்தச் சலுகை பற்றிய படத்தைக் கடந்த திங்கட்கிழமையன்று டுவிட்டிரில் வாசகர் ஒருவர் பதிவேற்றம் செய்தார். கலாசார உணர்வுகளைப் பாதிக்கும் செயல் என்று அறியாமல் தனது இளைய விற்பனை ஊழியர் ஒருவர் அந்தச் சலு கையை இடம்பெறச் செய்தார் என்று கோல்ட் ஸ்டோரெஜ் நிறுவனம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.

"அந்தச் சலுகையை உடனே அகற்றி அதன் தொடர்பில் அந்த ஊழியருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இந்துக் களின் உணர்வுகளைப் பாதிக்கும் வண்ணம் நாங்கள்அதைச் செய்யவில்லை. தீபாவளி கொண்டாடும் இந்துக்கள் அனை வரிடமும் இது குறித்து நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள் கிறாம்," என்று 'கோல்ட் ஸ்டோரெஜ்' நிறுவனம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!