சாலையில் கவனக்குறைவாக பேருந்து ஓட்டிய காரணத்தால் முதிய சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணத்தை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போ டெக் கெங் எனும் 59 வயது பேருந்து ஓட்டுநருக்கு 15 நாள் சிறையும் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டத் தடையும் தண்டனையாக நேற்று விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திரு போ, தனது 196 சேவை எண் பேருந்தை மரின் கிரசெண்ட், மரின் பரேட் ரோடு சந்திப்பில் செலுத்திக் கொண்டிருந்தபோது, இடப்பக்கம் திரும்புகையில் வலதுபுறம் பார்த்தாரே தவிர, இடப்பக்கம் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்று கொண் டிருந்த 87 வயது ஆர்டி டானைக் கவனிக்க தவறினர்.
பேருந்து டானின் மீது மோதியதால் அந்த முதியவர் படுகாயம் அடைந்து, பின்னர் மருத்துவமனையில் மரணமுற் றார். ஆர்டி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பணி யாற்றிய திரு போ வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது இரவு நேரக் காவலாளியாக வேலை செய்கிறார்.