சுவிஸ் தனியார் வங்கியான பிஎஸ்ஐ வங்கியிலிருந்து வெளி யேறி, மலேசியாவின் 1எம்டிபி அரசு நிதிக்கு முற்றிலும் சொந்த மான பிரேஸன் ஸ்கை நிறுவனத் துடன் செயல்படும் நிதி நிறுவ னத்தை அமைத்து ஏகப்பட்ட பரிந் துரைப்புக் கட்டணம் சம்பாதிக்கும் யோசனை தன்னுடையதே என்று முன்னாள் பிஎஸ்ஐ வங்கியாளர் இயோ ஜியாவெய்=யின் முன்னாள் மேலதிகாரி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். "யோசனை என்னிடமிருந்து வந்திருக்கலாம், ஆனால் இந்த யோசனைக்கு இயோ தீவிர ஆதர வளித்ததோடு, இதுபற்றிய பேச்சு வார்த்தையிலும் ஈடுபாட்டுடன் பங் கெடுத்தார்," என்று வழக்கின் மூன்றாம் நாள் விசாரணையின் போது திரு கெவின் சுவாம்பிள்ளை கூறினார். அரசுத் தரப்புச் சாட்சி யாக சாட்சியமளித்த பிஎஸ்ஐ வங்கியின் முன்னாள் சொத்து நிர்வாகச் சேவைப் பிரி வின் தலைவர் திரு சுவாம்பிள் ளையை இயோவின் வழக்கறிஞர் பிலிப் ஃபொங் குறுக்கு விசா ரணை செய்தார்.
நிதி நிர்வாகத் தொழில் தொடங்கும் யோசனையை அவர் இயோவுக்குக் கொடுத்தாரா என்று வழக்கறிஞர் பிலிப் ஃபொங் கேட்டார். "நிதி நிறுவனம் US$2.3 பில்லியனுக்கு (S$3.2 பில்லியன்) மேலான முதலீடுகளை நிர்வகிக் கும். இதை நீங்கள் இயோவிடம் சொன்னீர்களா," என்று திரு ஃபொங் கேட்டார். ஆனால் சுவாம் பிள்ளை இதை மறுத்தார். தான் எதுவும் சொல்லாமலேயே "அந்தத் தொழில் லாபகரமானதாக இருக் கும் என்பதை இயோ அறிந்திருந் தார்," என்றார் அவர். காவல்துறையினரிடம் பொய் சொல்லும்படியும் ஆதாரத்தை அழிக்கும்படியும் சாட்சிகளிடம் கூறி நீதிக்கு இடையூறு ஏற்படுத் தியதாக 33 வயது இயோ மீதான நான்கு குற்றச்சாட்டுகள் நீதிமன் றத்தில் விசாரிக்கப்படுகின்றன.