சிறப்பு உதவி பிள்ளைக்கும் 2019 முதல் கட்டாயக் கல்வி

சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு 2019 முதல் கட்டாயக் கல்வி அமலாகிறது. மிதமானது முதல் அதிகமான அளவுக்கு சிறப்பு உதவி தேவைப் படும் பிள்ளைகள் மற்ற பிள்ளை களைப்போல அரசாங்க உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பயிலவேண்டும். கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று இந்தப் புதிய கொள்கையைப் பற்றி அறிவித்தார். அரசாங்க உதவிபெறும் சிறப்புக் கல்விப் பள்ளிக்கூடங்களின் வரு டாந்திர மாநாடு நேற்று நடந்தது. அதில் உரையாற்றிய அமைச்சர், இந்தப் புதிய நடவடிக்கை சிங்கப்பூரில் எல்லாரையும் உள்ள டக்கும் வகையில் இடம்பெறும் தேசிய திட்டத்தில் முக்கியமான ஒரு மைல் கல் என்று குறிப்பிட் டார்.

சிறப்பு உதவி தேவைப்படும் எல்லா பிள்ளைகளும் அரசாங்க நிதி உதவிபெறும் பள்ளிகளில் முறையான கல்வியைப் பெறுகிறார் கள் என்பது மகிழ்ச்சியாக இருக் கிறது என்றார் அமைச்சர். சிறப்பு உதவி பள்ளிக்கூடங் களில் பாடத்திட்டங்கள், போதனை, கற்றல், ஆசிரியர்களுக்கான நிபுணத்துவ மேம்பாடு, அடிப்படை வசதிகள் ஆகிய துறைகளில் இடம்பெற்று வரும் மேம்பாடுகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், லோக்னாரோ‌ஷினி என்ற 11 வயது மாணவியுடன் சேர்ந்து விமானத்தை வரைகிறார். யீ‌ஷூன் பார்க் பள்ளிப் பேராளர் திருவாட்டி ஷெரிஃபா எம் யோக்கோயாமா (இடது) உடன் இருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!