நேற்று முன்தினம் காலாங் பய லேபார் சுரங்கப்பாதையில் கார் ஒன்று தீப் பிடித்துக் கொண்டது. பின்னிரவு 12.01க்கு தீச் சம்பவம் பற்றி தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது. மரினா கரையோர விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் கார் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு தண்ணீர் குழாய் கொண்டு தீயை அணைத்ததாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீப் பற்றி -எரியும் கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்