பயங்கரவாத மிரட்டல்கள் பற்றியும் இந்த மிரட்டல்களால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இளையர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'நாம் அனைவரும் இணைந்து நிற்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மார்சிலிங்- யூ டீ குழுத் தொகுதியின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்தக் கருத்தரங்கில் யூ டீ தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் கலந்து கொண்டு பேசினார். மார்சிலிங் - யூ டீ குழுத் தொகுதியில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் 300க்கு மேற்பட்ட இளையர்களும் சமூகத் தலைவர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட மார்சிலிங்- யூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இடமிருந்து) திரு ஒங் டெங் கூன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கூப், திரு அலெக்ஸ் யாம். படம்: பெரித்தா ஹரியான்